"வாழ்க்கையை கொண்டாடுவோம்"- புற்றுநோயை வென்று வாழ்வோரின் நினைவுப் பயணம்


புற்றுநோய் என்ற சொல்லை பலரும் விரும்பாததன் காரணம் இந்த நோய் குறித்து இருக்கும் பயம் மற்றும் சந்தேகங்களே ஆகும். அனேகமாக இந்த நோயின் பக்கவிளைவுகள் மற்றும் நோயிலிருந்து மீண்டு வரும் விகிதம் குறைவாக இருப்பதும் கூட இதன் தொடர்புடையதாகும். ஆனால், நிறைய வகை புற்றுநோய்கள் ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக்கூடியவை என்ற உண்மையை அனைவரும் தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்று புற்றுநோய் எனப்படும் பயங்கரமான நோய்க்கு லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை முறை ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

வெற்றிகரமான விளைவுக்கு தேவையானது ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிவது, மன உறுதி, சிகிச்சை முடியும் வரை முழு ஒத்துழைப்பு ஆகும். 

இதுகுறித்தான நிகழ்ச்சி கோவை ஜெம் மருத்துவமனையின் சார்பில் ''வாழ்க்கையை கொண்டாடுவோம்''- புற்றுநோயை வெற்றிகரமாக ஜெயித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஒரு நினைவுப் பயனம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் பங்கேற்ற ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சி.பழனிவேலு பேசுகையில், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை குறிப்பாக புற்றுநோயை லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியும் என்று தற்போதைய சிகிச்சை முறை பற்றி விளக்கினார். ஜெம் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்ட பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையாகும் என்பதையும் எடுத்துக்கூறினார்.



இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்டம் 3201-ன் மாவட்ட இயக்குநர் பிரகாஷ் அங்கப்பன், துணை ஆளுநர் வரதராஜன் மற்றும் கூடுதல் ஆளுநரும் பங்கேற்று உரையாற்றினர்.

Newsletter

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...